2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவின் விளக்கமறியல், எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  

அவர், கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று புதன்கிழமை (05) ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தின்போது, அரசாங்க வாகனங்களை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில், பொலிஸ் நிதிக்குற்ற மோசடிப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்க கடந்த செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதியன்று சென்றிருந்த சரத் வீரவன்சவை, பொலிஸ் நிதிக்குற்ற மோசடி பிரிவினர் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவும், குறித்த தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .