Janu / 2026 மார்ச் 11 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், அல்-ஹஸனாத் வீதியில் சிறுவர்களைக் கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) பதிவாகியுள்ளது.
அல்-ஹஸனாத் பள்ளிவாசல் வீதி, எட்டாவது ஒழுங்கையில் அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவிலிருந்து காலை நேரப் பாட முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை, முகக்கவசம் அணிந்திருந்த நான்கு மர்ம நபர்கள் துரத்தியுள்ளனர். இதன்போது அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடி தப்பியுள்ளனர். வீதியோரத்தில் வெள்ளை நிற வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்தவர்களே தங்களைத் துரத்தியதாகவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்றதொரு கடத்தல் முயற்சி கடந்த வாரமும் இதே வீதியில் இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் உண்மையானது என்பதை அல்-ஹஸனாத் பள்ளிவாசலின் பேஷ் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் புத்தளம் மாநகர முதல்வர், புத்தளம் நகர பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினரின் கவனத்திற்கு பெற்றோர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எம்.எச்.எம். சியாஜ்
43 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago