2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன நாட்டு சிகரெட்டுகளை, சட்டவிரோதமான முறையில் ​இலங்கைக்கு கொண்டுவந்த அந்நாட்டுப் பிரஜையொருவர், இன்று (29) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ​கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன வேலைத்திட்டமொன்றில் பணியாற்றிவரும், 30 வயதுடை  ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

விமான நிலைய சுங்கப்பிரிவினர் இவரது பயணப்பொதியை சோதனையிட்டபோதே, 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

190 பொதிகளில் அடங்கிய 38,000 சிகரெட்டுகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக, விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .