Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 04, சனிக்கிழமை
Editorial / 2024 மார்ச் 01 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 வயதுடைய சிறுமியை கொடூரமாக தாக்கிய பின்னர் சிறுவர் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் பெற்றோர் இருவர் இன்று (1) கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
ரிதிமாலியத்த ஊரணிய கஹட்டவாடிய 13, மைல்கல் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய தாய் மற்றும் 27 வயதுடைய தந்தை ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோரின் தாக்குதலில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரிதிமாலியெத்த காவற்துறை அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்து சந்தேகத்தின் பேரில் தம்பதிகளை கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago