Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 08 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி யாரும் கதைக்க முன் வருவதில்லை. கதைப்பதற்கு பயப்படுகின்றனர். ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவுக்கு வழங்க வேண்டாம் என எச்சரித்தது. ஏனெனில் ஹம்பாந்தோட்டை அரசியல் ரீதியில், பூகோள ரீதியில் முக்கியமான இடமாகும். சீனா ஹம்பாந்தோட்டையில் கால் பதித்ததால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இங்கு கால் பதிக்க பார்க்கின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .