2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சீருடையுடன் ஸ்பா சென்ற பொலிஸ்

Editorial   / 2024 மார்ச் 13 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாம் தர சீருடை அணிந்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், சீருடையுடன் ஸ்பா சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சேவையை பெற்றுக்கொள்வதற்காகவே அவர், சீருடையுடன் ஸ்பா சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

யக்கல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பொலிஸ் சார்ஜன்ட், விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  தொம்பே பொலிஸில் இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு விசாரணைக்குப் பின்னர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.  

யக்கல பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில் உள்ள ஸ்பா மத்திய நிலையத்துக்கு சேவையை பெற்றுக்கொள்வதற்காக, பொலிஸ் சீருடையில் சென்றிருந்தமை தொடர்பில், யக்கல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், அந்த நிலையத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பி, பொலிஸ் சார்ஜன்ட், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .