2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா விமான சேவைகள் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம்  அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை குறித்த இரண்டு நிறுவனங்களிலும் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து ஆராயவே விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .