2025 மே 20, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Thipaan   / 2015 நவம்பர் 04 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க, சீதுவ பகுதியில்,  இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதுவடிய பாலத்துக்கு அருகில், இன்று பிற்பகல்  5.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர், கட்டான பிரேத சபையின் ரத்தொலுகம உப பிரிவின் சாரதியென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்;ந்த நலிந்த உதய குமார (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X