2024 மே 04, சனிக்கிழமை

தடுப்பூசி ஏற்றியோருக்கும் ஒமிக்ரான் தொற்று

Freelancer   / 2021 டிசெம்பர் 18 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 பிரிவின தலைமை ஒருங்கிணைப்பாளர், மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு இதுவரை தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
எனவே, ஒமிக்ரான் மாறுபாட்டைத் தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் முக்கியமானது என்றும்  தடுப்பூசி அளவுகளால் தனிநபரின் பிறபொருள் எதிரிகள் அதிகரிக்கப்படும் என்றும் டொக்டர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .