2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடுப்பூசி கொள்வனவு நாளையுடன் நிறைவு

Freelancer   / 2022 ஜனவரி 08 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடையும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.
 
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக் வி, சினோஃபார்ம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48,560,424 ஆக பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை எனவும் கொள்வனவு செய்யப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியினதும் விலை 5 முதல் 7.5 அமெரிக்க டொலர்களாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .