2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை  மற்றும் நாளை மறுதினம் (01) இடம்பெறவுள்ளது.

அரச ஊழியர்கள் மற்றும் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பித்த இராணுவ வீரர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்களிப்பில்  மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து விண்ணப்பித்த தபால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

குறித்த தினத்தில் வாக்களிக்க தவறிய வாக்காளர்கள் தாம் வசிக்கும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 07 ஆம் திகதி வாக்களிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X