நிதர்ஷன் வினோத்
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிதாமகர்களை நினைவு கூரும் 42 வது தமிழ் தேசிய வீரர்கள் தினம் தந்தை செல்வா நினைவு கேட்போர் கூடத்தில் நாளை சனிக்கிழமை மாலை-03.00 மணி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர் சுரேன் குருசுவாமி தெரிவித்தார்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி மூத்த போராளிகள் ஜெகன், தேவன், நடேசுதாசன் உட்பட 53 ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிதாமகர்களையும் பொது மக்களையும் அஞ்சலிக்கும் 42 ஆவது ஆண்டு நினைவேந்தலாக நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மூத்த ஊடகவியலாளர் வீ. தனபாலசிங்கம் விருந்தினர்களாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்
சி.வி.கே சிவஞானம், செல்வம் அடைக்கலநாதன்.பா.உ- தலைவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பா.உ - தலைவர் தமிழ் தேசிய பேரவை,தர்மலிங்கம் சித்தாத்தன் தலைவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ,சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,சி. நவீந்திரா (வேந்தன்] தலைவர் ஜனநாயக போராளிகள் கட்சி , முருகேசு சந்திரகுமார் தலைவர் சமத்துவக் கட்சி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
குறித்த நிகழ்வுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.