Freelancer / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில், இந்தியா குறித்துக் குறிப்பிடும்போது ‘நம் கிரகத்தில் இருக்கும் நரகப் படுகுழி’ என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். இது இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நட்பு நாடாக கருதப்படும் இந்தியா குறித்து ட்ரம்ப் இவ்வாறு பேசியமை சர்வதேச அளவிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த பேச்சு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாங்கள் அந்த விமர்சனங்களையும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பிந்தைய அறிக்கையையும் கவனித்தோம்.
இந்தத் தரம் தாழ்ந்த கருத்துக்கள் வெளிப்படையாகவே எவ்வித தகவலுமற்ற மற்றும் பொருத்தமற்ற ஒன்றாகவே உள்ளன. நீண்டகாலமாகப் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா - அமெரிக்க உறவின் யதார்த்தத்தை இவை நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். (a)
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago