Simrith / 2025 நவம்பர் 20 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவால் எடுக்கப்படும் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சுகாதாரத் துறையில் உள்ள எந்தவொரு நிபுணரோ அல்லது வேறு எவரேனும் ஒரு சுகாதாரத் துறை தொழிலின் சீருடையை மாற்றுவது அவசியம் என்று கருதினால், அந்தக் குழுவிடம் ஒரு முன்மொழிவை முன்வைக்க வேண்டும் என்றும், சீருடையை மாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறை சூழ்நிலையை பரிசீலித்த பிறகு குழு ஒரு முடிவை எடுக்கும் என்றும் கூறினார்.
24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago