Freelancer / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்காக 3,000 ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில், திடீர் மரண விசாரணை அதிகாரியொருவர், இன்று (03) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பகுதியில் மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றும் குறித்த நபரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 12ஆம் திகதியன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபருக்கு மரணச்சான்றிதழ் வழங்கவே அவர் 3,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மரணச் சான்றிதழைக் கோரியபோது குறித்த அதிகாரி இஞ்சம் கேட்டதாக அவரது சகோதரி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்தே சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago