2024 மே 06, திங்கட்கிழமை

திமிங்கல அம்பருடன் 3 சந்தேக நபர்கள் கைது

Mayu   / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிதக்கும் தங்கம் எனப்படும் சுமார் 3 கோடி பெறுமதியான 4 கிலோ 500 கிராம் திமிங்கல அம்பர் (திமிங்கல வாந்தி) சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேக நபர்கள் தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசத்தில் மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X