2026 மே 01, வெள்ளிக்கிழமை

தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்தவர் கைது

R.Maheshwary   / 2021 மார்ச் 15 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கிய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பாணந்துரை- கெசல்வத்த பகுதியிலிருந்து போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகநபரின் வங்கிக் கணக்குக்கு டுபாயிலிருந்து அதிகளவான பணம் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


குறித்த நிதியில் ஒரு தொகுதி இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்காக சில அமைப்புகளுக்கு வழங்கியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென்றும் இதற்கமைய சந்தேகநபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .