2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை மாற்ற முடியாது’

Editorial   / 2019 ஜூன் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகரால் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாகவும் அதை ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு அமைய மாற்ற முடியாதென்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

 அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் விடுப்பதற்கு ஜனாதிபதியால் முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் உண்மை எதுவென்பதை மக்கள் புரிந்துக்கொள்வர் என்றும் ​நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .