2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு கோரிக்கை

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தாண்டு நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை, உயர்தர பரீட்சைகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடையாள அட்டைகளை விரைவாக விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள, திணைக்களம் இது தொடர்பில் பரீட்சார்த்திகளும், சகல பாடசாலை அதிபர்களும் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அறிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் விண்ணப்ப படிவங்களை அனுப்பாமைக் காரணமாக, பரீ்சைகளுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பது சவாலான காரியமாகவுள்ளதென்றும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X