2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலுடன் தொடர்புடைய 1,034 முறைப்பாடுகள் பதிவு

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1,034 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று (19) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 992 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு  குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (19) பிற்பகல் 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 96முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X