Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீட்புப் பணி 4ஆவது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரிக் இயந்திரம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து குழி தோண்டப்படும் என வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது. சாரல் மழை சற்று பலமாக பெய்த நிலையில் தற்போது மீண்டும் லேசாக மழை பெய்கிறது.
மழை பெய்தாலும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறும் என ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago