2026 மே 06, புதன்கிழமை

நத்தார் மன்னிப்பு பிந்தியது

Editorial   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு நத்தார் தினத்தன்றும் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவர். ஆனால், இம்முறை நத்தார் தினத்தன்று எந்தவொரு கைதியும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவில்லை. 

வாழ்நாள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விவரம் திரட்டப்படுவதாகவும், கடந்த நான்கு வருடங்களுக்கான விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்படுவதால், நத்தார் பொதுமன்னிப்பு காலந்தாழ்த்தப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திரட்டப்பட்ட  தகவல்கள் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்ததன் பின்னர், நத்தார் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறைச்சாலைத் திணைக்கள தகவல்கள் மேலும் தெரிவித்தன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .