2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

நேற்றைய தொற்றாளர் விவரம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மேலும் 130 பேருக்கு நேற்று (14) தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா கொத்தணியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 1,721 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,170 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்கு உள்ளான  3,357 பேர் குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளதுடன், 1800 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .