2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

பிணை கோரி சஷீந்திர ராஜபக்ச மனு

Freelancer   / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச , கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இக் கோரிக்கையை ஆராயவேண்டியுள்ளமையால் குறித்த வழக்கினை ஒக்டோபர் 2 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சஷீந்திர ராஜபக்ச , மகாவலி நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை அரகலய போராட்டகாரர்கள் எரித்து அழித்தனர் எனத் தெரிவித்து இழப்பீடாக 8,850,000 ரூபாயை சட்டவிரோதமாகப் பெற்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .