2025 ஜூன் 28, சனிக்கிழமை

பல்டி அடித்தார் தௌபீக்

Editorial   / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை, 2022ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு போன்றவைகளுக்கு மாத்திரம்தான் நான் ஆதரவை வழங்கியிருந்தேன் என்று தெரிவித்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அரசாங்கத்துக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக   அறிவித்துள்ளார்.

ஆனால், இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன். எனது கட்சியின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்) தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், எரிபொருள் இல்லாமை, எரிவாயு இல்லாமை, மருந்துகள் தட்டுப்பாடு, அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களுக்காக இத்தீர்மானத்தினை எடுத்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .