2025 மே 08, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்

Editorial   / 2024 ஜூன் 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று வரக்காபொல பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரக்காபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலபே – ராஹுல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வரக்காபொல பகுதியிலுள்ள நீரோடையில் இன்று (09) காலை வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X