2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பஸ் விபத்து: 13 மாணவர்கள் காயம்

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விச் சுற்றுலாவுக்காக, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, அம்பலாந்தோட்டை- தெஹிகாலந்த பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 13 மாணவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை (19) 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

காலி மஹிந்த வித்தியாலய மாணவர்களே, இவ்வாறு விபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விபத்தில் ஆசிரியர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X