2024 மே 04, சனிக்கிழமை

பாதுக்கையில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2024 மார்ச் 01 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்க மடுலவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (01) ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வீட்டில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.

வீட்டுக்கு அருகில் உள்ள வேறொரு காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே குறித்த குழுவினர் குறித்த வீட்டில் தங்கியிருந்ததாகவும், வீட்டை கொள்வனவு செய்வதற்கான ஆயத்தத்தில் மக்கள் அங்கு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தந்த வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததால் பீதியடைந்த மக்கள் வீட்டின் சமையல் அறைக்கு ஓடி வந்து பொலிஸ் அவசர எண்ணிற்கு தகவல் கொடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .