2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பிசிஆர் பரிசோதனையை புறக்கணிப்பவர்களுக்கு சிக்கல்

Nirosh   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பொகவந்தலாவை பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்து பிசிஆர் பரிசோதனையை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகமும் பிசிஆர் பரிசோதனைகளை புறக்கணிக்கும் தொழிலாளர்களை தற்காலிகமாக பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X