Janu / 2025 ஜூன் 04 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாணந்துறை ஹொரேதுடுவ பாலத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபரை சோதனையிட்ட போது கால் சட்டைப் பையில் இருந்து வெளிநாட்டில் பயன்படுத்தக்கூடிய பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் மூன்று ரவைகள், மற்றும் குறித்த துப்பாக்கிக்கான கொள்கலன் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கொலைச் சம்பவங்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயன்படுத்த கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago