Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்கிலிக்கன் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பேராயர் பேரருட் திரு.ஜஸ்டின் வெல்பி, மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டு இன்று (29) காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரது விஜயத்தில், அவருடைய பாதிரியார் உள்ளிட்ட மேலும் சிலர் வருகைதந்துள்ளனர். இவர்களை, அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளனர்.
பேராயர் உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 31 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு- கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டதன் பின்னர், கண்டி மற்றும் குருநாகல் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago