2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மின்கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி பெற்றுத்தருமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

100க்கு 5 வீதமாக மின் கட்டணத்தை உயர்த்துமாறு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒக்டோபர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் 6 மாதங்களுக்கு கட்டணத்தை உயர்த்தும் அனுமதியே கோரப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம் தொடர்ந்தும் அமுலில் இருந்தால், மாதாந்தம் 850 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்திக்கநேரிடும் என மின்சார சபை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த கோரிக்கையானது, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவால், மின்சக்தி, எரிசக்தி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .