2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மர்மமான மரணம்

Editorial   / 2020 பெப்ரவரி 15 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலம், அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று(14) கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஐந்து வயது பிள்ளைகளின், 68 வயதுடைய தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

கனவனை இழந்த குறித்தப் பெண் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மர்மமான இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .