2026 மே 14, வியாழக்கிழமை

dd

மஹிந்தவை சந்தித்தார் சட்டமா அதிபர்

Nirosh   / 2021 மே 24 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இன்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

சட்டமா அதிபர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறுவது தொடர்பில் பிரதமருக்கு அறிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, தமது சேவை காலத்தில் ஏராளமான குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு வழங்க முடிந்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல முக்கியமான வழக்குகளை கையாள்வதற்கும், ஏராளமான பிற வழக்குகளை ஆரம்பிப்பதற்கு தனதுக் காலத்தில் தான் செய்த சேவைகளெனவும், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

இதன்போது இதேவேளை சட்டமா அதிபரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .