2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது அலை; சுகாதார அமைச்சின் வழிகாட்டல் கோவை

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 07 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்  எதிர்வரும் திங்கட்கிழமை (9)  தளர்த்தப்பட்டாலும் மூன்றாவது கொரோனா அலை உருவாகும் சூழலில் பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டுமென வழிகாட்டல் கோவையொன்றை சுகாதார அமைச்சு வெளியீட்டியுள்ளது.

ஆடைத்தொழில்துறை,போக்குவரத்து,வாடகை போக்குவரத்துசேவை,வருமானமீட்டும் ​சேவைகள்,அரச அலுவலகங்கள்,தனியார் சேவைகள்,பல்பொருள் அங்காடிகள்,கடைகள்,நிதி நிறுவனங்கள்,வங்கிகள், ஆடை விற்பனை நிலையங்கள்,விவசாயம்,பொருளாதார மத்தியநிலையங்கள்,பேக்கரி,வீதியோர விற்பனை கூடங்கள், நடமாடும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைத் தொகுதிகளில் ஏற்பாடுகளை செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி யளித்துள்ளது.

கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் வகுப்புகள், உள்ளக நிகழ்வுகள், திறந்தவெளி நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திரையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள், விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கரையோர விருந்துகள், நீர் தடாகங்கள், சூதாட்ட நிலையங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், மசாஜ் நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .