Editorial / 2024 ஜனவரி 18 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர எல்லைக்குள் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா அமைப்புகளின் ஊடாக சாரதிகளுக்கு தண்டப்பணம் வழங்கும் முறை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிவதை விட இந்த முறை 300 மடங்கு திறன் வாய்ந்தது என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
ஒரு மாகாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஒருவர் போக்குவரத்து விதிமீறலில் சிக்கினால், பொலிஸாரால் வழங்கப்படும் ரசீது அவரது வீட்டிற்கு வரும் எனவும், அபராதம் செலுத்திய பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026