Editorial / 2026 மார்ச் 29 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் சனிக்கிழமை (28) மாலை இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், ஒரு கொடூரமான வன்முறைச் சம்பவமாக மாறியுள்ளது.
இருவருக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், ஒருவர் மற்றவர் மீது கத்தியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற காயமடைந்த இளைஞனின் தாயார் மீதும் தவறுதலாகக் கத்தி வெட்டு விழுந்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞன் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபர், இச்சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேரடியாகச் சென்று சரணடைந்துள்ளார்.
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago