2025 மே 22, வியாழக்கிழமை

யால தேசிய பூங்காவின் சில வீதிகள் மீண்டும் திறப்பு

Freelancer   / 2025 மார்ச் 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று (05) பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின் வீதி அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதற்கும், அதன் மூலம் அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கும், மார்ச் 01 ஆம் திகதி முதல் யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இருப்பினும், மழை காரணமாக சேதமடையக்கூடிய வீதிகள் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

இன்று காலை யால தேசிய பூங்காவில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து இந்த நிலைமையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X