2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரணதுங்கவுக்கு நோட்டீஸ்

Thipaan   / 2016 மார்ச் 17 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தமை தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கையைத் தொடர்ந்து, இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை மார்ச் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சி.எஸ்.என் நிதிமோசடி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, தனது சகோதரரான நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான அமர்வுக்கு சமுகமளிப்பதற்காக, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்த தம்மிக்க ரணதுங்கவை, ஊடகவியலாளர்கள் படம்பிடிக்க முயன்ற போது, அவர் அச்சுறுத்தல்  விடுத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .