2025 மே 07, புதன்கிழமை

ரணிலை தோற்கடிக்க நால்வர் சூழ்ச்சி

Editorial   / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாஸ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர்  பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு பல நாட்களாக கூடி இந்த கலந்துரையாடலை நடத்தியதாகவும் அவர் கூறுகிறார். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, பொதுஜன பெரமுனவுக்கு எதிர்க்கட்சி பலத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என அவர் கூறுகிறார்.

சோதித்து பார்க்கும் நேரம் இல்லையென்றும், தப்பி தவறியேனும் அதிகாரம் மாறிவிட்டால், பெட்ரோல், உரத்தின் விலைகள் 5 ஆயிரம் ரூபாயாக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X