2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரணில் – மோடி சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்போது இந்திய பிரதமரோடு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார்.

இலங்கையில், இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை முன்னெடுப்பதில் காணப்படும் தாமதம் குறித்து, புதுடெல்லி கவலை வெளியிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .