Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மே 28 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற வைப்பதற்காக தமிழ் தரப்புடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை செய்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி மற்றும் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஆகியோருக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற விவாதங்களிலும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இவர்கள் துணிச்சலுடன் ஆணித்தரமாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்துக்களை முன்வைத்து, அழுத்தம் வழங்கியிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு குறித்த வர்த்தமானியை இரத்துச் செய்யும் விவகாரத்தில் வழங்கிய காத்திரமான பங்களிப்பை பாராட்டி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அஸ்லம் எஸ்.மௌலானா
10 minute ago
18 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
55 minute ago
2 hours ago