2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ரூ.10 கோடி பெறுமதியான தங்க நகைகள் சிக்கின

Editorial   / 2024 மார்ச் 19 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நகைகளுடன் டுபாயிலிருந்து வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க கண்காணிப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளனர் என  சுங்க ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட சுங்க பணிப்பாளர்  சிவலி அருங்கொட தெரிவித்தார்.

மதுபான போத்தல்களை அகற்றி வெளிநாட்டு மதுபான போத்தல்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் பெட்டிகளில் பொதியிட்டு விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட போதே குறித்த நகைகள் கைப்பற்றப்பட்டதாக அருங்கொட தெரிவித்தார்.

இரண்டு பயணிகளும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை வசிப்பவர்கள் என்றும் தெரிவித்த அருங்கொட,மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X