Janu / 2026 மே 18 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய திங்கட்கிழமை (18) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரதமருடன் மேலும் இருவர் உத்தியோகபூர்வ குழுவினராக (Delegation) இப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இன்று பிற்பகல் 1:20 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல்.- 403 (UL-403) என்ற விமானம் மூலம் இங்கிலாந்தின் இலண்டன் நகர் நோக்கிப் புறப்பட்டனர்.
பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளனர்.
டி. கே. ஜி. கபில
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago