2025 மே 19, திங்கட்கிழமை

விமல் வீரவன்ச கைது

Menaka Mookandi   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெளிநாடொன்றுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த விமல் வீரவன்சவை, குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் தடுத்து வைத்திருந்ததை அடுத்து அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இரு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவரை கைது செய்ததாகவும் கூறிய பொலிஸ் பேச்சாளர், விமல் வீரவன்சவை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • செ தெய்வசீலன் Sunday, 25 October 2015 03:55 AM

    ஒருவர் இரண்டு கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். இதைப் பற்றித் தெரியாத சாதாரண பிரஜை ஒருவர் வைத்திருந்தால் பெரும் குற்றம். இவர் அரசியல்வாதி. இவருக்காக கதைப்பதற்கு பாராளுமன்றம் இருக்கிறது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X