2024 மே 06, திங்கட்கிழமை

வங்கிக்குள் நுழைந்தவர் கைது

Janu   / 2024 ஜனவரி 31 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை , பிராந்திய அபிவிருத்தி வங்கியை சேதப்படுத்தி வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவரை  கைது செய்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருவளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிராந்திய அபிவிருத்தி வங்கிக்குள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து இனம்தெரியாத ஒருவர் உள்ளே நுழைந்த சம்பவம்  புதன்கிழமை (31) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பேருவளை பொலிஸார்  புதன்கிழமை (31)  காலை 6.30 மணியளவில் சந்தேக நபரை  கைது செய்து மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X