2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடக்குக்கான ரயில் சேவைகள் இரத்து

Kanagaraj   / 2015 நவம்பர் 12 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக்கான இரவு பிரதான ரயில் சேவைகள் நான்கும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்றிரவு 8.30க்கு புறப்படும் ரயில், தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி இன்றிரவு 9.30க்கு புறப்படும் ரயில், உள்ளிட்ட நான்கு சேவைகளே இரத்துசெய்யப்பட்டுள்ளன.

வடக்கு ரயில் தண்டவாளத்தில் தம்புத்தேகம ரயில் நிலையத்துக்கு அண்மையில், ரயிலொன்று இன்றுக்காலை தடம்புரண்டது.

தடம்புரண்ட ரயிலை தடத்தில் நிறுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதையடுத்தே இந்த ரயில்சேவைகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன என்று கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X