2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

“வாயை மூடச் சொன்னதுக்கு மன்னியுங்கள்”

Editorial   / 2025 ஜூலை 24 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 புதன்கிழமை (23)  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை வாயை மூடச் சொன்னதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன, வியாழக்கிழமை (24)    மன்னிப்பு கேட்டார்.

"சபாநாயகர் அந்த நேரத்தில் நடந்து கொண்ட விதம் காரணமாக நான் ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது ஒழுக்கம் எங்கே என்று சபாநாயகர் கேள்வி எழுப்பினார், மேலும் எனது மன்னிப்பு அந்தக் கேள்விக்கான பதில்" என்று  கவிரத்ன கூறினார்.

மேலும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது சிறப்புரிமைகளை மீறியதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

"நான் ஒரு கொலைகாரனின் மகள் என்று சபைத் தலைவர் கூறினார். என் தந்தை யாரையும் கொல்லவில்லை, ஆனால் மாத்தளை மாவட்ட மக்களுக்கு உயிர் கொடுத்தார்," என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது பல சித்திரவதை அறைகள் இருந்ததை அவர் ஏற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X