2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்: பிரதமர்

Princiya Dixci   / 2016 மார்ச் 11 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

சிறந்த சட்டத்தரணிகளை அமர்த்தி, வழக்குகளை எதிர்கொள்வதற்குத் தயாராகுங்கள் என்று கூட்டு எதிரணியைப் பார்த்து கேட்டுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருடர்கள் எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வெளிப்படுத்தப்படுவர் என்றும் கூறினார். 

நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (11) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது உதய கம்மன்பில எம்.பி, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரான மலிக்சமர விக்கிரமவிடம் எழுப்பிய கேள்விக்கு தெளிவுப்படுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பங்குச் சந்தை மோசடி ஒன்று தொடர்பில் பிரான்ஸ் உயர்நீதிமன்றத்தினால் 2006ஆம் ஆண்டு குற்றவாளியாகக் காணப்பட்ட ஜோர்ஜ் சொரொ என்பவரை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பொருளாதார மாநாட்டுக்குச் சிறப்பு அதிதியாக அழைத்தது ஏன்? என உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார். 

அக்கேள்விக்குப் பதிலளிப்பதற்காக இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார். 

ஜோர்ஜ் சொரொவை நாம் அழைக்கவில்லை. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு அவர் வந்திருந்தார். அவருக்கு ஒரு சதம் கூட நாம் வழங்கவில்லை. அவரது வருகை தொடர்பில் அவைக்கு முன்னரே நாம் அறிவித்திருந்தோம். 

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வெற்றிலை வைத்து அழைத்தனர். எனினும், அவர் வரவில்லை. இவரைப் போலவே பலரையும் அழைத்திருந்தனர். ஆனால், யாருமே வரவில்லை. 

மோசடிக்காரர்கள், பங்குச் சந்தையில் களவெடுத்தவர்கள் எதிர்வரும் மூன்று மாதங்களில் வெளிப்படுத்தப்படுவர். எனவே, சிறந்த சட்டத்தரணிகளை அமர்த்தி வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்று கூட்டு எதிரணியைப் பார்த்துக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .