Janu / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு பாறையில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில், ஒரு குழந்தையின் தாயான, 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், காலி, யக்கலமுல்ல, கராகொட பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஓர் அங்கவீனமான சிப்பாய் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார், அது ஒரு பாறையிலிருந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களில் ஓட்டுநர், கொல்லப்பட்ட பெண்ணின் தாயும், பாலர் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026